புதன், 31 மார்ச், 2021

நாலும் மாறிடும்

 நாளை நடப்பது அறிந்தவர் எவருளர்

நாலும் மாறிடும் நல்லதே நடக்கும்
வீணர் போவதும் தீ்ரர் வருவதும்
கோணங்கள் மாறிடும் கோலங்கள் தோன்றிடும்
ஆறுதல் சொல்வது அடுத்தவர் செயலாம்
தேறுதல் தெரிதல் புத்திக் கூர்மையாம்
சொல்வதும் செய்வதும் ஒன்றே ஆகுமா
நல்லவர் வல்லவராதலின் நன்றே நடக்குமாம்
வளமைகள் பெருகிட வறியவை அழியுமாம்
வகுத்திடும் திட்டங்கள் வரைபவர் திறமையால்
பொய்களும் மாயையும் பொசுங்கிப் போகுமாம்
உண்மை பேசுதல் உயர்வைத் தந்திடும்
கடமை மட்டுமே கருத்தில் கொண்டவர்
உடனே செய்வர் உயரும் சமுதாயம்

கருத்துகள் இல்லை: