புதன், 31 மார்ச், 2021

காத்திருக்கும் காலமெல்லாம்

 பற்பல வர்ணங்கள் பற்பல மதங்கள்

பாரத தேசமென்று பெயர் அதற்கு
கற்பதும் பலமொழிகள் காண்பது பலநிறங்கள்
என்றாலும் ஒற்றுமை ஓங்கி நிற்கும்
வளமான நாடென்ற பெயரும் இதற்குண்டு
வந்தோரை வரவேற்கும் விருந்தோம்பல் உண்டு
கனிம வளங்கள் காடுகள் தன்னகத்தே
பனிச் சிகரம் பாய்ந்தோடும் நதிகள்
நீண்ட கடலோடு இயற்கை எழிலுமுண்டு
பண்டைய நாகரீகம் பலவும் தோன்றியதிங்கே
எதிலும் குறைவில்லை என்றேன் இறுமாப்பாய்
ஆணவக் கொலைகள் அழிந்ததா எனக்கேள்வி
ஆள்கின்ற வர்க்கம் ஊழலற்றதா வினாக்கள்
உழவன் உயர்ந்தானா வறியவன் ஏற்றமுண்டா
உனதென்ற எனதென்ற
சண்டைகள் மறைந்ததா
விலைகள் மலிந்தனவா வீதிகளில் அமைதியுண்டா
விழுக்காடு வளர்ச்சியிலே உயர்வுண்டா உண்மையிலே
கனவுகள் கண்ட கலாமின் கற்சிலை
கற்பனைகள் நிஜமாக காத்திருக்கும் காலமெல்லாம்

கருத்துகள் இல்லை: