வெள்ளி, 8 ஜனவரி, 2021

பாட்டு ஒண்ணு

 பாட்டு ஒண்ணு பாடச் சொன்னேன்

கேட்டு மகிழ காது குளிர
பாடிய அவள் கண்ணுலே கண்ணீர்
வாடிய மலர் போல முகமும்
ஏனோ மனசு உருகிப் போச்சு
ஏதோ பழைய நினைவு ஏக்கமாய்
பாவி மனசுக்கு மறக்க முடியலை்யோ
பாச உணர்வுக்கு பாதை தெரிவதில்லை
ஒட்டி ஒட்டாமலே இதயத்து ஓரத்தில்
ஒருத்தியோ ஒருவனோ ஓவியமாய்ப் பதிவாக
காலத்தால் அழியாத காதலின் வலிமையது
காட்சி கண்முன்னே விரியும் விடைதேடும்
காவியம் பிறக்கும் கதைகள் உருவாகும்
ஓவியம் மலரும் ஒளிரும் வண்ணத்தில்
தொடரும் நெடுங்கதையே முடிவே இல்லாமல்
தொல்லைதான் பலர்வாழ்வில் இன்பமாய் அசைபோட

கருத்துகள் இல்லை: