வெள்ளி, 8 ஜனவரி, 2021

மறக்கலே ஆத்தாயி

 என்ன விட்டு போனவளே எங்கேனு சொல்லுவியா

எத்தனை வருஷம் போச்சு காலமும் உருண்டோடி
சோளக் கொல்லையிலே கதிர் அறுத்துத் தந்ததுவும்
களத்து மேட்டுலே நிலாச் சோறு தின்னதுவும்
கழனிக்கு நீர் பாய்ஞ்ச கிணத்து தண்ணியிலே
விழுந்து எழுந்தத பாத்து நான் சிரிச்சதுவும்
கரும்பு தோட்டத்துலே கடிச்சு நீகொடுத்த சக்கையும்
விடிஞ்ச நேரத்துலே தெருவுக்கு தெளிக்கும் தண்ணீய
விளையாட்டா என்மேல தெளிச்சு களுக்குன்னு சிரிச்சதுவும்
வேகவைச்ச வேர்க்கடல ஒண்ணொன்னா உரிச்சு கொடுத்ததுவும்
போகவச்சு முகம் பாத்து திண்ணயிலே நின்னதுவும்
யாருமில்லா இரவினிலே மடிமேலே படுக்க வைச்சதுவும்
மோரும் கூழும் கலந்து சொம்பிலே கொடுத்ததுவும்
c மறஞ்சு போனது தாங்கலியே
மறுபடி வருவாயா மாமனுக்குச் சேவைசெய்ய !

கருத்துகள் இல்லை: