வெள்ளி, 8 ஜனவரி, 2021

நானொன்றும் மானில்லை

 பெண்ணாகப் பிறந்தது என் தவறா

மண்ணாகிப் போவதற்கே மானுடம் அன்றோ
கடவுளின் படைப்பினிலே உன்னதமே பெண்மையன்றோ
கற்பென்ற ஒன்றை வைத்ததும் நீயன்றோ
உத்தமனாய் வாழ்வதற்கு உரைத்தவன் நீதானே
பித்தமனம் கொண்டென்னை சிதைத்தது ஏனிங்கே
சின்னப் பெண்ணென்று சிரித்தாலே தப்பாமோ
என்ன வயதென்றும் பார்ப்பது விட்டாயே
மிருகமாய் நீயங்கே சதைப்பசி கொண்டாயே
மிதித்து அழித்து உயிரை மாய்த்தாயே
தாய்க்குப் பிறந்த மகன் தறுதலையா
தாசியென நினைத்தாயா தரம்கெட்டுப் போனாயே
விட்டுவிடு நானும் உன்போன்ற மனிதன்
வேட்டையாட நானொன்றும் மானில்லை இங்கே !

கருத்துகள் இல்லை: