உளமகிழும் ஊர்மகிழும் நீரெங்கும் நிரம்ப
குளம் ஏரி கிணறு ஆறு
வழிந்தோட வந்தது பெருமழை நன்றே
வடியாத நீர்தேக்க அணைகள் தேவை
பாலாறு வைகையில் நீரென்றால் அதிசயமே
பலகாலம் மணலாறு மடைதிறந்த வெள்ளத்தில்
இன்னொரு புயலாம் இடியுடன் மழையாம்
இயற்கை விளையாட்டு இனியும் தொடருமாம்
இன்னல் வறியவர்க்கு இருப்பிடம் இல்லார்க்கு
வருமுன் காக்க வழிகள் நலமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக