வெள்ளி, 8 ஜனவரி, 2021

அமைதியும் அழிவும்

 கொட்டும் மழைநீரே பெருக்கெடுத்தால் வெள்ளம்

கொதிக்கும் தீக்குழம்பு பீறிட்டால் எரிமலை
கட்டுக்கடங்கா கானகத்து நீரோடை காட்டாறு
கடலிலே தோன்றிய காற்றழுத்தம் புயலாய்
வரம்பு மீறுவதால் இயற்கையின் சீற்றங்கள்
வரப்புக்குள் செல்லும் நீரதுவே வயலுக்கு
வாடிவாசல் திறந்தாலே காளையின் கோபம்
வாழ்க்கை எல்லைக்குள் இருக்கும்வரை அமைதி
புயலுக்குப் பின்வரும் பேரழிவுத் துயரம்
புரட்சிக்கு வித்தாகும் புல்லுருவிக் கூட்டம்
அமைதியும் அழிவும் அருகருகே உலகில்
அதைத் தெரிந்து தேர்வதே சமுதாயநீதி

கருத்துகள் இல்லை: