வெள்ளி, 8 ஜனவரி, 2021

காலை விடிந்தது

 பனிப் போர்வையில் விடிந்த இந்நாள்

பகலவன் குளிரில் உறக்கம் கலையவில்லை
ஏரி நீரில் தோன்றுது நீராவி
ஏதோ அவசரம் காக்கைக்கு காலையில்
சேவல் விடியலின் வரவை கூவிச்சொல்ல
கூவும் குயிலின் இசையோ தொலைவில்
மலை முகட்டில் இன்னமும் பனிமேகங்கள்
காலை விடிந்தது கதிரவா எழுந்திரு
ஆகாய அன்னை அழைப்பது கேட்கலியோ
ஆம் பாவம் களைத்துப் போயிருப்பான்
ஆதவா பரவாயில்லை மெதுவாக எழுவாய்
ஆயிரம் கரங்களும் அணைக்க நாங்களுண்டு

கருத்துகள் இல்லை: