செவ்வாய், 13 அக்டோபர், 2020

கவலை

 கவலை இல்லாத மனிதன் இல்லை உலகத்திலே

கப்பல் ஓட்டினாலும் காரை ஓட்டினாலும் எவனுக்குமே
ஓட்டை ஏந்தி பிச்சை எடுத்தாலும் ஓட்டல் முதலாளியும்
நாட்டை ஆளும் அரசனும் நாடோடி மனிதனும்
உழவு செய்பவனும் உண்டு கொழுத்த முதலாளியும்
உண்மை சொல்பவனும் பொய்யில் மறைந்து வாழ்பவனும்
விதிவிலக்கு இல்லையடா
கவலை உன்னை உலுக்குமடா
வீதி எல்லாம் புலம்ப வைக்கும் சிலரையடா
இருந்தாலும் கவலை இல்லை என்றாலும் கவலை
இருப்பவன் காப்பாற்ற இல்லாதவன் தேவையென்று கவலை
வாழ்க்கை ஒரு வட்டமடா வருவது போகும்
வாடிக்கை இதுவென்று உணர்ந்தே வாழுபவன் ஞானியடா
வேடிக்கை உலகம் ஓடியாடிச் சேர்த்த செல்வம்
வேகின்ற தீயோடு வருவதில்லை சாம்பலே மிஞ்சுமடா !

கருத்துகள் இல்லை: