செவ்வாய், 13 அக்டோபர், 2020

தாய்மொழி

 தமிழ் அழிகிறது அழித்தார்கள் என்று சொல்வதை விட நாம் வளர்க்கப் பார்க்கலாம்.

முதலில் நம்மில் தொடங்கட்டும். தூய தமிழிலும், பிழையின்றி எழுதுதலும் நம்மில் குறைந்திருக்கிறது. பல ஊடகப் பதிவுகள் நண்பர்கள் பதிவிடும் போது முடிந்தவரை பிழையில்லாமல் எழுதப் பழகலாம்.
பெரும்பாலும் ர,ற ன,ண,ந போன்றவைகளும் சந்திப் பிழைகளுமே தமிழ் அறிந்த நாம் செய்வது.
இளம் தலைமுறையினர் மொழியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இன்னொரு மொழி கற்றுக் கொள்வதில் தவறில்லை. தாய்மொழியை நன்றாக பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். வேற்று நாட்டினரே பேசிப் பழக ஆரம்பித்துள்ளனர். மொழி வளர பிழையற்ற பயன்பாடு தேவையாகிறது.

கருத்துகள் இல்லை: