செவ்வாய், 13 அக்டோபர், 2020

நல்வினை செய்

 கூடு விட்டுப் பறக்கு முன்னே கூவுது குயிலே

காடு முழுக்கக் கேட்கும் குரலில் கர்ஜிக்கும் சிங்கம்
பாடு பட்டு உழுதாலே பயிர் விளையும் பூமியிலே
நாடு விட்டு நாடு போனாலும் தாய்நாடு மறவாதே
கோடு போட்டு புள்ளிகளை இணைத்தாலே கோலம் உருவாகும்
வடு மார்பில் தாங்கினாலே வீரனெனச் சொன்னார் முன்னோர்
நடு இரவில் விழித்தே இரை தேடும் சில உயிர்கள்
படு பட்டுத் திருந்து என்று சொல்லி வைத்தார்
சுடு சொற்கள் பேசுவதே சிலரின் வாடிக்கை பாவியவர்
கடு கடுவென்ற முகம் ரசிக்கத் தக்கது அல்ல
விடு அனைத்தும் போகட்டும் சாக்காடு அழைக்கு முன்னே
நாடு நல்லதே ஒவ்வொரு நாளும் நல்வினை செய்

கருத்துகள் இல்லை: