செவ்வாய், 13 அக்டோபர், 2020

வெட்கம் இன்றித் திரிவேன்

 ஊர் பற்றி எரியும் வேளை எனக்குப் பிடில் வாசிக்கப் பிடிக்கிறது

யார் என்ன சொன்னால் என்ன வெட்கம் இல்லை என்றும் எனக்கு
போர் தொடுத்து வென்று கடல் கடந்து சென்ற தமிழன் யாரோ
நேர் நின்று பேச முதுகு எலும்பு இல்லை என் செய்ய
கூர் அம்பு வார்த்தை எய்து ஏசினாலும் எனக்கு உரைக்காது ஐயா
பேர் புகழ் வேண்டாம் எனக்கு பெட்டி நிறையப் பணம் வேண்டும்
நார் இன்றி பூக்களை மனித நரம்பு கொண்டு கட்டித் தருவேன்
ஏர் கொண்டு உழுபவன் இருந்தால் என்ன இறந்தால் என்ன எனக்கு
பார் உள்ள வரைக்கும் பகல் வேடம் போடக் கற்று வந்தேன்
ஊர் மக்கள் என் முகத்தில் உமிழும் காலம் ஒன்று வரும்
வேர் ஊன்றி அதுவரை வெட்கம் இன்றித் திரிவேன் சிரிக்காதே மனிதா !

கருத்துகள் இல்லை: