செவ்வாய், 13 அக்டோபர், 2020

எஸ் பி பி

 உன் பாட்டில் உருகிய நாட்கள்

உன் குரலில் மயங்கிய கணங்கள்
காதலில் திளைத்த துளைத்த வரிகள்
கானம் என்றாலே உன் குரலாய்
உன்னோடு மயங்கி உன்னோடு உறவாடி
தன்னை மறந்த நாட்கள் எத்தனை
பாசமா காதலா உறவா நட்பா
தொடாத பாவங்கள் உண்டா இல்லை
பாடல்கள் வாழ்ந்த நாட்களிலும் அதிகம்
கால்கள் கண்கள் கைகள் அனைத்தும்
கட்டுக்குள் வைத்தாய் உனது குரலாலே
எஸ்பிபி என்பதே இசையான வார்த்தை
எங்கே சென்றாய் நிலாவே இருளிலா
வருவாய் தானே மீண்டும் மேகத்தினூடே !

கருத்துகள் இல்லை: