செவ்வாய், 13 அக்டோபர், 2020

எத்தர்கள் நாடகம்

 அணையும் முன்னே ஒளிர்விடும் விளக்கு

அலையும் காற்றில் கலந்த நச்சு
விளையும் நெல்லில் ஊடுருவிய புற்கள்
வளையாடும் பெண்ணின் இரத்தக் காட்டேரி
நெஞ்சம் பதறும் பாதகம் நாட்டில்
வஞ்சம் மனதில் வல்லூறு வானில்
பொய்மைச் சுடுகாட்டு பிணந்தின்னிப் பேய்கள்
வாய்மை கூறுபோட்டு வீதிகளில் குப்பையாய்
எரியும் நெருப்பாய் மனித உள்ளங்கள்
எத்தர்கள் நாடகம் முடியும் நாட்களுக்காய்

கருத்துகள் இல்லை: