செவ்வாய், 13 அக்டோபர், 2020

கவிதைக் காதலி

 மாலை வரும் முன்னே மழை வந்ததே

காலை முதலே வானிலே கருமேகக் கூட்டம்
கதிரவன் வரவை மேகப் போர்வை மறைக்க
சதிராடும் மயில்கள் மட்டும் தோகை விரித்தாட
குளிரான இதமான காலை போர்வை விலக்காமல்
பளீரென மின்னல் கீற்று எங்கோ தொலைவில்
இடியொன்று முழங்கி அடங்க விடியல் தொடக்கம்
முன்னிரவு மழையின் ஈரக்காற்று சன்னலின் ஊடே
என்னோடு கவிதைக் காதலி மட்டும் கதகதப்பாய்
மெல்லச் சொன்னாள் அத்தான் காலை ஆயிற்று
செல்லப் பணித்தாள் செவிமடுத்து துயில் எழுந்தேன்

கருத்துகள் இல்லை: