செவ்வாய், 13 அக்டோபர், 2020

நல்விதைகள்

 தமிழென்ற மொழியறிந்து விழுகின்ற வார்த்தைகள்

தனையறிந்த வித்தகனாய் வந்திடும் நாளுமிங்கே
எனையாளும் தமிழ்த்தாயே உன்னாலே சிறந்தேன்
எனக்குள்ளே நீயிருந்து எழுத வைத்தாய்
கணக்கில்லா சொல்வரிசை கற்பனை உன்னாலே
கண்ணுக்குள் உறைந்தாய் கனவாய் மலர்ந்தாய்
விண்ணுக்கும் மண்ணுக்கும் காற்றுக்கும் கடலுக்கும்
விரைந்திட வைத்தாய் வித்தைகள் வார்த்தையில்
நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை
யாரின்றி வாழ்ந்திடினும் உன்பிரிவு இயலாது
நானென்ற அகங்காரம் எந்நாளும் எனக்கில்லை
நாவினில் உன்னாலே நல்விதைகள் என்றென்றும்
போகாது எனைவிட்டு உன்பெருமை பாடுவது
நோகாத சொற்களிலே ஊரார்நலம் பாடிடுவேன் !

கருத்துகள் இல்லை: