செவ்வாய், 13 அக்டோபர், 2020

நினைவுகள் வளரும்

 நேற்றோடு போனாயே இருளுக்குள் மேகமாய்

காற்றோடு கரைந்து கடலுக்குள் புகுந்தாயோ
ஆற்றோடு மணலாய் கலந்து போனாயோ
சேற்றோடு சேர்ந்து தாமரையாய் மலர்ந்தாயோ
நாற்றாக மனதில் நினைவுகள் வளரும்
ஊற்றாக உறவிது நீரோடை விரியும்
வற்றாத நதியாய் சுழன்று செல்லும்
பற்றாத கரங்கள் பயனற்றுப் போகும்
கற்றதே உனக்காய் கவிதைகள் வடித்திட
சுற்றமே நட்பே சுகந்தானே சொல்
பற்றற்ற வாழ்க்கை பயனில்லை காண்பாய்
முற்றத்தில் அமர்ந்து முழுநிலவைப் பார்த்தேன்
முகமது அதனில் முறுவலிக்கக் கண்டேன்
முற்றும் இரவுக்கு முன்வந்து சேர்ந்திடு

கருத்துகள் இல்லை: