இசை பாடும் குயிலே எங்கே நீயே
வசை பாடும் மனிதா ஏனோ நீயே
பசை போட்டு வாயை மூடி வைப்பாய்
அசை போட நாட்டில் ஆயிரம் உண்டு
கசை அடி தாங்கும் கயவரும் உண்டு
ஓசை பெரிதா ஓலம் பெரிதா தெரியாது
காசை இறைத்தால் காகமும் கழுதையும் பாடும்
மீசை வைத்தவர் மேடையில் வீரம் பேசுவார்
பாசை பிடித்த பழங்கதை பேசுவது ஏனோ
தசை எலும்பு எரிந்து சாம்பல் ஆகும்
தனது என்ற ஆணவம் அழிந்து போகும்
உனது ஆன்மா இறையடி சேர நேரும்
நன்மை தெரிந்து நடுநிலை பேசு இப்போது
உண்மை தெரிந்து உள்ளம் தெளியும் அப்போது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக