செவ்வாய், 13 அக்டோபர், 2020

அரசியல் வாதிகளே !

 அரசியல் வாதிகளே !

உங்களுக்கான பதிவு இது
திருந்தப் பாருங்கள், இனியேனும்.
மக்களுக்கு நல்லது செய்யுங்கள். ஊழலை ஒழித்து நல்லவனாய் வாழுங்கள். அரசின் சலுகைகளோடு நிறுத்துங்கள். உங்களை காமராசர் போல வாழச் சொல்லவில்லை. கொள்ளையடிப்பதைக் குறையுங்கள்.
தீய வழியில் சேர்த்த பணம் உங்களை மட்டுமல்ல சந்ததியினரையும் பாதிக்கும்.
நல்ல தலைவர்கள் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்கள். உங்களைப் பார்த்தே சமுதாயம் சீரழிகிறது.
நாட்டு முன்னேற்றத்துக்கு உண்மையாய் பாடுபடுங்கள். மக்களை ஊக்குவியுங்கள். உழைக்கட்டும். ஓட்டுக்காய் இலவசம், பணம் கொடுத்தது போதும்.
நல்லதொரு சமுதாயம் இனியேனும் உருவாகட்டும். பொய் அரக்கு மாளிகைகள் கட்ட வேண்டாம்.
ஒரு சக மனிதனாகச் சமுதாயம் சுத்திகரிக்கச் சொல்கிறேன்.
செவிடனாக கடந்து செல்ல வேண்டாம்.

கருத்துகள் இல்லை: