செவ்வாய், 13 அக்டோபர், 2020

சோதனைக் காலமிது

 மலையோரம் காத்து வீசுது மழை வரப் பார்க்குது

மனதோரம் காதல் சேருது மயங்குது பெண் மனசு
உன்னோடும் என்னோடும் உறவாகி உசுரான நட்பாகி நாளாகுது
உடலுக்கும் உணர்வுக்கும் இரை தேடுது உள்ளம் வாடுது
கரையோரம் நண்டு சத்தம் கேட்டு வலைக்குள் போகுது
கடலோரம் வந்த அலையில் மணல் காலைத் தழுவுது
காற்றோடு சேர்ந்து கீதம் காதுக்குள் இனிமை சேர்க்குது
நேற்றோட எண்ணக் கீற்று மனசோரம் நெருடிப் போகுது
பாட்டாலே பலகாலம் சொன்ன போதும் பாவிசனம் மாறலியே
ஒட்டாத மனுசனா சாதியத் தான் விட்டொழிக்க மாட்டானே
கூற்றுவன் கொண்ட உடல் நிறம் பாத்தா மண்ணாகுது
கூடுவிட்டு ஆவி போகு முன்னே திருந்தப் பார்ப்பானா?
சோதனைக் காலமிது சோர்வடைய வேண்டாமே மனசு சொல்லுது
வேதனைதான் என்றாலும் இதுவும் கடந்து போகும் அன்றோ !

கருத்துகள் இல்லை: