வெள்ளி, 8 ஜனவரி, 2021

இவையெல்லாம் மாறுமா ?

 என்னோடு கூடவே வருபவை மாறவில்லை

எழுகின்ற ஞாயிறு கீழ் திசையில்
இரவென்றும் பகலென்றும் இன்பமும் துன்பமும்
இல்லாத மனிதர்கள் இரந்துண்டு வாழ்தல்
உழைக்கும் வர்க்கம் உயராத சோகம்
உழவன் வீட்டில் இருக்கும் வறுமை
காசுக்காக விலை போகும் மனிதர்கள்
பேசும் பேச்சில் பொய்கள் ஆயிரம்
ஊழல் மலிந்த சமுதாயச் சாக்கடை
ஊராரை ஏய்த்து உண்ணும் பிசாசுகள்
மண்ணில் பிறந்ததே மானக் கேடு
எண்ணில் அடங்கா எத்தர்கள் அரசியல்
என்றோ ஒருநாள் மண்ணுக்குள் நானும்
இன்றோ நாளையோ இவையெல்லாம் மாறுமா ?
விடியும் காலை தூயதாய் ஒளிருமா ?
விடை பெற யாரிடம் செல்வேன் ?

கருத்துகள் இல்லை: