வண்ணக் கோலங்கள் வான வீதியில்
வரைந்தவர் யாரோ ஓவியன் தானோ
கண்ணுக்கு விருந்து படைப்பவன் அவனோ
விண்ணுக்குத் தூரிகை யாரது செய்தது
மழைமேகம் மணல்வெளி கடல்நீர் காற்று
இழையோடும் இயற்கையின் விந்தை ஓவியம்
கடலின் அலைகளும் கரைசேரும் மனிதனும்
ஓடத்தில் அமர்ந்த படகோட்டி ஒருவனும்
ஓடும் புரவியின் ஒளிரும் உருவமும்
காலைப் பொழுதின் வண்ண விளையாட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக