எனக்கெனப் பிறந்தவளே இசைபாடும் குயிலே
உனக்கென்ன தூரத்தே நகையாடி நின்றாய்
பிணக்கெதற்கு என்மேல் பிழையாது செய்தேன்
கணக்கொன்று வைப்பாய் கடைசியில் பார்க்க
குரல்கேட்டு நாட்களும் பலவாயிற்று பெண்ணே
விரல்கோத்து நடந்திட ஓடோடி வருவாயா
கடற்கரை மணல்வெளி கால்தடம் கேட்குது
உடலதன் மீதிலே உப்புக்காற்றும் வீசுமாம்
படகிலே அமர்ந்து பக்கத்தில் உட்கார்வா
பசுமைக் காட்சிகள் பார்த்தே இரசித்திருப்போம்
பிரிவுக்கு விடைகொடு உறவுக்குக் கைகொடு
பரிவுகொள் பறந்தோடி வந்தென்னை பற்றிக்கொள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக