நெல் விதைச்சு நாத்து நட்டு கதிரறுத்து
புல் களஞ்சு புதுக் காயும் வளரவிட்டு
பசு சாணம் தெளிச்சு கோலம் இட்டு
பாலோடு தேனோடு பச்சரிசிப் பொங்கலிட்டு
படையல் இட்டு கற்பூர ஆரத்தி கதிரவனுக்கு
பட்டாடை உடுத்தி பக்கத்தே உறவோரும் குழும
பொங்கிடும் மகிழ்வுக்கு ஈடில்லை கண்டீரோ மக்களே
உழவுக்கு வந்தனை செய்வோம் உயர்வுக்கு வழியதுவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக