வெள்ளி, 8 ஜனவரி, 2021

உழவுக்கு வந்தனை செய்வோம்

 நெல் விதைச்சு நாத்து நட்டு கதிரறுத்து

புல் களஞ்சு புதுக் காயும் வளரவிட்டு
பசு சாணம் தெளிச்சு கோலம் இட்டு
பாலோடு தேனோடு பச்சரிசிப் பொங்கலிட்டு
படையல் இட்டு கற்பூர ஆரத்தி கதிரவனுக்கு
பட்டாடை உடுத்தி பக்கத்தே உறவோரும் குழும
பொங்கிடும் மகிழ்வுக்கு ஈடில்லை கண்டீரோ மக்களே
உழவுக்கு வந்தனை செய்வோம் உயர்வுக்கு வழியதுவே

கருத்துகள் இல்லை: