வெள்ளி, 8 ஜனவரி, 2021

புலம்பாதே

 சுட்டெரிக்கும் வெயிலென்றாய் கதிரவனைச் சபித்தாய்

விட்டொழித்து மேகமாய் மழையானேன் கோபமுற்றாய்
சாக்கடைகள் சந்தெல்லாம் நீரென்றாய் நிந்தித்தாய்
போக்கற்ற மனிதா பொறுப்பற்றவன் நீதானே
சுத்தமாய் எதையும் வைத்தாயா இல்லையில்லை
சத்தமாய்ப் பேசும்நீ குப்பையைக் கொட்டினாயே
சாக்கடைகள் போகும் வழிதனை மறித்தாயே
பூக்களையும் கொட்டி அதில் அடைத்தாயே
புலம்பாதே இப்போது அழிவதே உன்னாலே
கலங்கி என்ன பயன் கற்றுக்கொள்
அதனதனை அதனதன் இடத்தில் சேரத்தாலே
அடைமழை ஆனாலும் வெள்ளம் பெருகாது

கருத்துகள் இல்லை: