பனி விழும் இரவு முடிந்து பகலவன் தோன்றினான்
கனவுகள் கலைந்து கண்கள் திறந்து உலகை நோக்கின
நேற்றைய இரவு இனிதே முடிந்து இன்றைய பொழுது நோக்கிய எண்ணங்கள்
கற்றது அறிவும் அனுபவம் அனைத்தும் என்றோ உதவும்
உற்ற நட்பும் உடன் மனையாளும் இனிமை சேர்க்கும்
சுற்றமும் சூழும் உறவுகள் தொடரும் நீண்ட வாழ்வில்
சுகமான சுமைகள் சுமந்திடத் தெரிந்தால் வாழ்வே இனிமை
அமைதியை அன்பைப் பெற்று விட்டாலே ஆனந்தம் என்றும்
ஆதியும் அந்தமும் இயற்கையின் நூலில் அத்தியாயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக