திங்கள், 7 செப்டம்பர், 2020

ஆதியும் அந்தமும்

 பனி விழும் இரவு முடிந்து பகலவன் தோன்றினான்

கனவுகள் கலைந்து கண்கள் திறந்து உலகை நோக்கின
நேற்றைய இரவு இனிதே முடிந்து இன்றைய பொழுது நோக்கிய எண்ணங்கள்
கற்றது அறிவும் அனுபவம் அனைத்தும் என்றோ உதவும்
உற்ற நட்பும் உடன் மனையாளும் இனிமை சேர்க்கும்
சுற்றமும் சூழும் உறவுகள் தொடரும் நீண்ட வாழ்வில்
சுகமான சுமைகள் சுமந்திடத் தெரிந்தால் வாழ்வே இனிமை
அமைதியை அன்பைப் பெற்று விட்டாலே ஆனந்தம் என்றும்
ஆதியும் அந்தமும் இயற்கையின் நூலில் அத்தியாயங்கள்

கருத்துகள் இல்லை: