திங்கள், 7 செப்டம்பர், 2020

பொல்லாச் சிறுக்கி

 கருக்கலில் கண் விழித்தேனடி

காணவில்லை எங்கே போனாய்
உருக்கமாய் பாடலைப் பாடினாயே
உயிருக்குள் நுழைந்த காதலியே
படுக்கையிலே தேடி நின்றேன்
பாதியிலே எங்கே சென்றாய்
செவிக்கு உணவளிக்க யாருமில்லை
செந்தமிழில் தேன்சேர்த்துத் தந்துவிடு
அருகினில் இருந்தாலே ஆனந்தம்
அணைத்திட தோள்சாய வந்துவிடு
ஏனிந்த விளையாட்டு பெண்ணே
நானிங்கு தவிப்பதை ரசிப்பாயோ
பொல்லாச் சிறுக்கி நீயன்றோ
பொழுது சாய்வதற்குள் வந்துவிடு

கருத்துகள் இல்லை: