யாரோடு் உறவாட விழையும் நெஞ்சு
நீரோடு சேர்ந்து குழைந்த சந்தனமாய்
நாரோடு இணைந்த மலரும் மணக்கும்
நாலோடு ஐந்தும் பின்பு பலவாகும்
நூலோடு கல்வி கற்க ஒன்றாகும்
பாலோடு பழம் தின்றல் இனிமை
கோலோடு நின்றாலும் தொடரும் தன்மை
வாதாடும் வழக்காடும் கோபம் கொள்ளும்
காதோடு இரகசியங்கள் பலவும் சொல்லும்
ஏனடா நலமா தினமும் கேட்கும்
ஏதேனும் உண்டோ இதனின் மேன்மை
நட்பென்ற உறவு இணையற்ற ஒன்று
நம்மோடு தொடரும் வாழ்வின் எல்லைவரை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக