திங்கள், 7 செப்டம்பர், 2020

காதலி வந்தாள்

 நடுநிசிப் போதில் காதலி வந்தாள்

நச்சென முகத்தில் முத்தம் தந்தாள்
ஈரம் உணர்ந்து விழிகள் திறந்தன
தூரமாய் இருந்தவள் அருகினில் வந்தாள்
அள்ளி எடுத்தேன் அணைத்துச் சிரித்தேன்
கள்ளி அவள் காதினைக் கடித்தாள்
உறக்கம் கலைத்தேனா செல்லமாய்க் கேட்டாள்
உனக்காகக் காத்திருந்து கனவினில் துயின்றேன்
இத்தனை நாளாய் எங்கேநீ சென்றாயோ
இரக்கம் இல்லையோ வினவினேன் அவளிடம்
இதழால் இதழ் மூடினாள் கண்களும்
வார்த்தைகள் வரவில்லை வண்ணங்கள் மட்டுமே
போர்த்திய அவளுடல் குளிருக்கு வெப்பமாய் !

கருத்துகள் இல்லை: