நடுநிசிப் போதில் காதலி வந்தாள்
நச்சென முகத்தில் முத்தம் தந்தாள்
ஈரம் உணர்ந்து விழிகள் திறந்தன
தூரமாய் இருந்தவள் அருகினில் வந்தாள்
அள்ளி எடுத்தேன் அணைத்துச் சிரித்தேன்
கள்ளி அவள் காதினைக் கடித்தாள்
உறக்கம் கலைத்தேனா செல்லமாய்க் கேட்டாள்
உனக்காகக் காத்திருந்து கனவினில் துயின்றேன்
இத்தனை நாளாய் எங்கேநீ சென்றாயோ
இரக்கம் இல்லையோ வினவினேன் அவளிடம்
இதழால் இதழ் மூடினாள் கண்களும்
வார்த்தைகள் வரவில்லை வண்ணங்கள் மட்டுமே
போர்த்திய அவளுடல் குளிருக்கு வெப்பமாய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக