திங்கள், 7 செப்டம்பர், 2020

அம்மா இறந்த அன்று

 அம்மாவை நேசிச்ச அளவுக்கு அப்பாவை நான் நேசிச்சது இல்லை.

அவருடைய நடவடிக்கைகள் பலவும் கோபமூட்டுபவையாக இருந்ததே காரணம் . பல வருடங்கள் அவரோட பேசாமல் இருந்திருக்கிறேன்.
அவரை நான் நேசிச்சதுனு சொல்வதானால் சிறுவனாய் இருந்தபோது மட்டுமே.
அம்மாவின் இளவயது மரணத்திற்குக் காரணமானவர் என்ற நினைவும், அம்மாவின் மனநலம் பாதிக்கக் காரணமானவர் எனவும் ஆழமான எண்ணம் என் மனதில் பதிந்திருந்தது.
தாயின் அரவணைப்பு அதிகமாய் இல்லாமல் போனது பெருங்குறையாய் என்றும்.
இவ்வளவு வெறுப்போடு இருந்த போதும் ஒரு நெகழ்ச்சியான தருணம் ஓவியமாய் மனதில்.
அவர் அழுது நான் பார்த்ததே இல்லை. கல் நெஞ்சக்காரன், எதற்கும் கலங்காதவர் எனப் பெயர் பெற்றவர்.
அம்மா இறந்த அன்று உறவினர்கள், நண்பர்கள் வற்புறுத்தலால் தேர்வு எழுத மாமா ஒருவரின் துணையோடு நான் கிளம்பிய போது, தெருமுனை வரை வந்து அழுது என்னை வழியனுப்பி வைத்த போது புரிந்து்கொண்டேன், இந்தக் கல்லிலும் ஈரம் இருக்கிறது என்று. அந்தக் காட்சி மனதில் ஆழமாய் என்றும்.

கருத்துகள் இல்லை: