திங்கள், 7 செப்டம்பர், 2020

மௌனத்தில்

 யாரைத் தான் சொல்வதோ பேதமையோ

ஊரைத் தான் உன்னைத் தான்
பேரைத் தான் சொல்வேனோ என்செய்ய
உரைத்தேன் உருகினேன் கடிந்தேன் கதறினேன்
கரையும் காகத்தின் குணமும் உணரவில்லை
புரையோடிப் போனது புற்றுநோய் ஆனது
இரைச்சல் இன்சொல் இழிசொல் இத்தனையும்
வரைந்த கோட்டிற்குள் யாரும் நிற்பதில்லை
உள்ளம் வேதனை கொண்டது மௌனத்தில்
கள்ளம் மனதில் வைத்தே கருத்தா
தேனீக்கள் கட்டிய தேன்கூடு இதுவன்றோ
தேடியே பலமலரின் தேனின் இனிமையுண்டு
விட்டு விடுவீரோ வீண் பேச்சு
சுட்டு விடும் நெருப்பில் கலையாமல்
கூடு சிதறாமல் காத்து நிற்க !

கருத்துகள் இல்லை: