சனி, 5 செப்டம்பர், 2020

காதல் நோய்

 கண்ணுக்குள் அவளிருக்க கண்ணிமைகள் ஏன் திறக்க

பெண்ணுக்குள் பதுமையென இதயத்தில் பூட்டி வைத்தேன்
விண்ணில் மின்னும் தாரகை அவள் விழிகள்
எண்ணச் சிறையில் பூட்டி வைத்தேன் சிலநாளில்
வண்ணக் கனவுகள் வகையாய் தினம் ஒன்றாய்
பண்ணிசை பலவும் காதுக்கு இனிமை சேர்க்க
பரவசம் உடல் பரவ மயங்கி நின்றேன்
எங்கிருந்து வந்தாளோ யானறியேன் எனை ஆட்கொண்டாள்
பங்கொன்று கேட்டேன் பாவியவள் இதயக் கூட்டினில்
கொள்ளென்று சிரித்தாள் கொள்ளை கொண்டாள் மனதை
கொடியது காதல் நோய் வாட்டியது உள்ளமதை
வருவாளா இன்றாவது வழி பார்த்துக் காத்திருக்கேன்
தருவாளா அவள் மனதை எனதாக்கிக் கொள்ள !

கருத்துகள் இல்லை: