மெல்லிய குளிர்காற்று தட்டி எழுப்பியது
சொல்லியது பறவையினம் காலையின் வரவுதனை
கதிரவன் தூரத்தே மெதுவாய் வெளிவந்தான்
புதிய நாளுமிங்கே விடியத் தொடங்கிற்று
கட்டியம் கூறியது குயிலின் குரலோசை
கருமேகம் மலைமுகட்டைத் தழுவிக் கொண்டது
நீர்மேலே பசுமைப் போர்வை ஆங்காங்கே
நீயென்ன இன்னும் படுக்கையிலே விடிந்ததுபார்
இருள்நீங்கி வெளிச்சக் கீற்று வந்ததுபார்
இனியதொரு நாளினை எதிர்கொள் எழுந்துவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக