திங்கள், 7 செப்டம்பர், 2020

எங்கே அவள்

 மாலையும் வந்தது முகிலும் கருத்தது

காலையில் வந்த கதிரவன் மறைந்தான்
கோலங்கள் தெருக்களில் கலைந்து நின்றன
கோபுர உச்சியில் விளக்குகள் ஒளிர்ந்தன
கூடுகள் நோக்கிப் பறவைகள் திரும்பின
வீடுகள் அனைத்தும் வெளிச்சம் போட்டன
மங்கிய ஒளியில் மதிமுகம் தேடினேன்
பொங்கிய சிரிப்பை பொத்தினான் நண்பன்
முகமதில் கோபம் நிறைந்தே நோக்கினேன்
அகமதில் ஏளனம் அவனெனைப் பார்த்தான்
வருவேன் என்றாளே எங்கே அவள்
வாடிக்கை இவளது ஏமாற்றும் சொற்கள்
வருந்திய முகம் கண்ட தோழன்
கருத்திலிருத்து வருவாள் அவள் என்றனன்

கருத்துகள் இல்லை: