மாலையும் வந்தது முகிலும் கருத்தது
காலையில் வந்த கதிரவன் மறைந்தான்
கோலங்கள் தெருக்களில் கலைந்து நின்றன
கோபுர உச்சியில் விளக்குகள் ஒளிர்ந்தன
கூடுகள் நோக்கிப் பறவைகள் திரும்பின
வீடுகள் அனைத்தும் வெளிச்சம் போட்டன
மங்கிய ஒளியில் மதிமுகம் தேடினேன்
பொங்கிய சிரிப்பை பொத்தினான் நண்பன்
முகமதில் கோபம் நிறைந்தே நோக்கினேன்
அகமதில் ஏளனம் அவனெனைப் பார்த்தான்
வருவேன் என்றாளே எங்கே அவள்
வாடிக்கை இவளது ஏமாற்றும் சொற்கள்
வருந்திய முகம் கண்ட தோழன்
கருத்திலிருத்து வருவாள் அவள் என்றனன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக