திங்கள், 7 செப்டம்பர், 2020

தாமரைத் தோட்டம் பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம் - 9
இந்தத் தொடரை இந்த அத்தியாயத்தோடு முடித்துக் கொள்வதே நலம். 1981 வரையில் மட்டுமே காலனியில் இருந்தேன். அதற்குப் பிறகு சில மாதங்கள் தியாகப்ப முதலி தெரு ஒண்டுக் குடித்தனத்தில் நண்பர் சுந்தரத்தோடும் அம்மா ( சுந்தர், சம்பந்தம் இவர்களது தாயார்)வோடும் சில மாதங்கள். 1982ல் சென்னையைத் துறந்து பெங்களூர் சென்று விட்டேன்.
மார்ஷல்லே சேர்ந்த ஆரம்ப காலங்கள்ளே இங்கிலீஷ் பேச ரொம்ப தடுமாற்றம். மெது மெதுவா கத்துக்க ஆரம்பிச்சேன். ஆல்வா, ஜகன்னாதன் இவங்க தலைமைலே வேலை செஞ்சேன். எனக்கு காஸ்டிங்ஸ் வாங்கிக் கொடுக்கிற வேலை.
உட்டன் பேட்டன், அலுமினியம் பேட்டன்னு வேற வேற மெட்டீரியல் உபயோகிப்பாங்க. சப்ளையர் விஸிட்ஸ் ஆரம்பிச்சது. எனக்கு முன்னாடி அந்த வேலைல இருந்தவங்க கமிஷன் வாங்கினாங்கன்ற விவரம் தெரிய வந்தது. பிரைவேட் கம்பெனிலேயும் ஊழலான்னு யோசிச்சேன். அதனால் இன்னும் கவனமா இருக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு மேலே மெட்டீரியல்ஸ் டிபார்ட்மெண்ட்லே இருந்தும் பேர் கெடாம கறை படியாம பாத்துகிட்டேன்.
ஒரு சின்ன ஒருதலைக் காதலும் உண்டு. ஸ்டெனோவா இருந்தவங்க டைப்பிங் பெர்சனல் லெட்டர. உதவி பண்ணுவாங்க. நல்லா பேசுவாங்க அழகா இருப்பாங்க. அப்புறம் தான் தெரிஞ்சது அக்கவுண்ட்லே இருக்கிற அவங்க ஜாதிப் பையனை காதலிக்கிறாங்கனு.
சென்னைலே இருக்குற காஸ்டிங் பவுண்டரி சுபாஷ் மெட்டல், சிவானந்தா,கோபால் நாயகர் கோயம்பத்தூர்லே அப்ப ஃபிளை வீல் சப்ளை பண்ற ஸ்ரீ வித்யா இஞ்சீனியரிங் விஜயவாடாலே பாரத் மெக்கானிகல் ஒர்க் ஹைதராபாத்லே வித்யுத் ஸ்டீல், பாம்பேலே காட்ரெஜ் ஸ்டீல் பவுண்டரினு பாலோ பண்ணி கிரஷருக்கு வேண்டிய பார்ட்ஸ் வாங்கித் தரணும்.
இதைப்பத்தியே தனியா ஒரு அத்தியாயம் எழுதலாம். என்னோட வேலை செஞ்ச சிலர் குவாரி தொடங்கி பல்லாவரம் மலை பக்கம் போயிட்டாங்க. எனக்கும் ஆசை இருந்தது, வெறுங்கைலே முழம் போட வேணாம்னு விட்டுட்டேன்.
இந்த மூணு வருஷத்துலே எர்த் மூவிங் இயந்திரங்க பத்தி தெரிஞ்சு கிட்டேன். ஸ்டோன் கிரஷர்ஸ், மொபைல் கிரேன், டீ டிரையர், பேவர் பினிஷர்னு.
டெய்லர்ஸ் ரோடுலே பஸ் ஏறி அம்பத்தூர் எஸ்டேட் பல நேரம் தொங்கிகிட்டு தான் 71 பஸ்லே. அங்கே இருக் கிற லக்கி ஓட்டல்தான் மீட்டிங் ஜாயின்ட். ஏசி ரூம்லே அங்கே சாப்பிட்ட டீ போல சுவையா எங்கேயும் கிடைக்காது.
இரவுகள்ளே நானும் சுந்தரும் ஒரே தலைப்புலே எழுதுவோம். அந்த டைரி இன்னும் இருக்கு. விஜயவாடா வெயில் மறக்க முடியாது.
நிறைய பயணங்கள். பெங்களூர் வேலை கிடைச்சு சென்னை விட்டு கிளம்புனப்ப ஒரே ஒரு ஸூட்கேஸ் தான் என்னோட சொத்து. கண்களில் கண்ணீரோடு அம்மா, நண்பர்கள், சென்னை விட்டு இரயில் நகர்ந்தது. நண்பரோட தாயார் என்றாலும் என்னை சொந்த மகனாகவே கவனிச்சு கிட்டாங்க. கிட்டத்தட்ட மூன்று மாசம் வயிற்று வலியால் இரவெல்லாம் துடிச்சப்ப தண்ணி காயவச்சு சூடு ஒத்தடம் கொடுப்பாங்க. பத்திய சாப்பாடு எண்ணை இல்லாம ஆவில வேக வச்ச சமையல்தான், என்னால அவங்களும் சாப்பிடுவாங்க.
நண்பர்கள் இத்தகைய உறவுகள் முற்பிறவிப் பயனென அடிக்கடி நினைவு கூர்வேன்.
( முற்றும்)
Ram Manohar M D and Selvaraj Selvaraj

கருத்துகள் இல்லை: