திங்கள், 7 செப்டம்பர், 2020

தாயவள் மடி

 தாயெனும் பிறவி சேயினைக் காக்க

தாலாட்டும் பாராட்டும் இடுப்பில் சுமக்கும்
சுமக்கும் பாரம் பத்து மாதமல்ல
இறக்கும் வரைக்கும் இறக்கி வைப்பதில்லை
சுகங்கள் துறந்து சுமையென எண்ணா
முகங்கள் எல்லாம் தாய்மையின் வடிவம்
அன்பு அவளது அள்ளக் குறையாது
அல்லும் பகலும் தனக்கென வாழா
தெய்வப் பிறவி இல்லமே கோயில்
மற்றொரு பிறவி மானிடன் ஆதலின்
மனிதக் கடவுள் தாயவள் மடிதனில் !

கருத்துகள் இல்லை: