திங்கள், 7 செப்டம்பர், 2020

கருமேகங்கள்

 மனிதன் உறங்கட்டும் எழுவதற்கு நேரமுண்டு

மதவெறி விளையாட்டு மண்டைக்கு ஏறட்டும்
மொழிதனில் சித்து விளையாடி முடியட்டும்
மொத்தமாய் கடவுளை தம்மிடம் கொண்டனர்
வாய்மை யாதெனில் பொய்மையின் வார்த்தைகள்
வாசனை மலர்கள் காகிதப் பூக்களாய்
சொல்வது செய்வது வஞ்சகச் செயல்கள்
புவிதனில் கருமேகங்கள் குவிந்து இருண்டன
புத்தக ஏடுகள் சரித்திரம் படித்தன
பாதகம் செய்வதே சாதனை ஆனது
வேதனை மனதினில் வேறென்ன செய்வது
காலம் மாறுமா காட்சிகள் மாறுமா
கருமை மறைந்து வெளுக்குமா வான்வெளி
கேள்விகள் ஆயிரம் கேட்பது யாரிடம்

கருத்துகள் இல்லை: