திங்கள், 7 செப்டம்பர், 2020

சுதந்திரப் பறவை

 நேற்று வந்த காற்றிலே நினைவுகள் கலைந்தன

ஊற்று வற்றியதா ஈரம் தொலைந்ததா நான்றியேன்
பாட்டுக் கட்டிப் பாட நான் புலவனல்ல
ஏட்டில் எழுதுவதே கவிதை யெனில் நானும் கவிஞன்தான்
கூட்டுக்குள் வாழாத சுதந்திர வான்வெளிப் பறவை
காட்டு மரங்கள் நீரோடை புள்ளினங்கள் ஓசை ஊடுருவும்
இயற்கை எனக்கு அணைபோட வேண்டாம் காட்டாற்று வழி
செயற்கை உணர்வுகள் தள்ளி வைத்தே வாழுமது
ஓடும் விளையாடும் தாவும் தத்தளிக்கும் சோகமுறும்
கேடொன்றும் நினையாது காதல் காமம் ஊடுருவும்
உள்ளம் தெளிவாகும் உணர்ச்சியின் வடிகால் ஆகும்
தெள்ளத் தெளிவோ தெரியாத பொருளோ கருத்திருக்கும் !

கருத்துகள் இல்லை: