வாழ்வில் நட்பென்ற புனிதமான உறவு
வாலிபம் முதலாய் வயோதிகம் வரை
அதனிலும் மேலாய் வேறொன்று இல்லை
பொல்லாத சாதிமதமும் மொழியும் ஏனோகுறுக்கே
கல்லாத மனிதரல்ல யாரும் நம்மில்
சொல்லாத நாளில்லை ஒற்றுமை உயர்வை
நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்
தூய்மை மனதில் தூர் வாரட்டும்
தூரத்தே போகட்டும் கசடுகள் கழிவாய்
காலம் பொன்னானது கடந்தவை திரும்பாது
காலன் வருமுன் கற்றிடப் பார்ப்போம்
உறவுப் பாலம் உறுதியாய் ஆகட்டும்
பிறந்தோம் வளர்ந்தோம் இணைந்தோம் நட்பில்
இதனினும் வேறென்ன வேண்டும் சொல்வீர்
இதமாய் இனிதாய் பழகுவோம் மகிழ்வோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக