மனக் குரங்கு மதி கெட்டு அலையுது
மரம் ஏறுது கிளை தாவுது குதிக்குது
சினங்கொண்டு குரல் வலுத்து கூப்பாடு போடுது
இனம் தெரியாமலே இறுமாப்பில் ஏதேதோ பிதற்றுது
குணம் ஆகுமா நிலை கொள்ளுமா நிற்குமா
கணம் ஒன்றிலே தன்னிலை அறியுமா தவிக்குமா
நிலை மாறிட நிஜம் உணர்ந்திட நினைக்குமா
நிழலோடு உறவாடவே தினம் விழையுமா மாறுமா
எதை நோவதோ யாரைக் கடிவதோ புரிகிலை
விதை போட்டதே யாரெனத் தேடியே களைத்தேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக