திங்கள், 7 செப்டம்பர், 2020

முடிவில்லாப் பயணம்

 இரு தண்டவாளங்கள் சம இடைவெளியில் பயணிப்பதால் இரயில் தடம் புரளாமல் செல்லும்

இருவேறு கோணங்களில் நாம் பயணிக்கிறோம். அதனால் முடிவில்லா விவாதங்கள் தொடர்ந்தபடி இருக்கும்.
ஒவ்வொரு மொழியும் மதமும் சிறப்பானதே. காலத்தால் அழியாத காவியங்களில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர் போரிடுதல், கொள்ளையடித்தல், பெண்டிரைக் களங்கப்படுத்தல் நடந்தவற்றைப் பதிவிட்டிருக்கின்றன.
நமக்கு உகந்தவற்றை மேற்கோள் காட்டுவது நமது இயல்பு.
இது முடிவில்லாப் பயணம். நாம் பச்சோந்திகள். நேரத்திற்கு ஏற்றாற்போல் மாறுவோம். அடங்குவோம். ஆர்ப்பரிப்போம். பம்முவோம், கொக்கரிப்பொம், வலைக்குள் இருப்போம், வீர வசனம் பேசுவோம்.
மனித இனமே காலங்காலமாய் அவ்வாறே. உமக்கு சரியெனப் பட்டது எனக்கு சரியாகத் தோன்றாது.
பழமையில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. உண்மைதான் மனிதனே எல்லா வேற்றுமைக்கும் காரணம்.
சோழன் நாடுகள் கவர்ந்ததை போற்றும் நாம் சீனனைப் போற்றுவதில்லை. எனக்குப் பிடித்ததை உயர்வென்று எண்ணுவது இயல்பு.
மனித இனம் உள்ளவரை இது தொடரும் .
நான் நல்லவை எங்கிருந்தாலும் அதைச்சேகரித்து வைக்கப் பார்க்கிறேன். சில நேரங்களில் சாக்கடையிலும் வைரக்கற்கள் விட்டு விட மனமில்லை எனக்கு.
இருக்கும் சில காலங்களில் மனதிற்கு அமைதியும் சுகமும் தேடிப் பயணப்பட.டுக் கொண்டிருப்பேன். பயணம் நிற்கும் வேளை சுவாசம் நின்றிருக்கும்.

கருத்துகள் இல்லை: