சனி, 5 செப்டம்பர், 2020

உருவம் அற்ற பேயாய்

 வாடுது மனம் தேடுது நலம்

ஓடுது ஒளியுது உருவம் அற்றது
வந்தது சேர்ந்து உயிரைப் பறித்தது
நொந்தது வறியவர் உண்டி சுருக்குண்டு
என்றது விலகிடும் எவரும் அறியார்
வென்றது அதுவோ வேதனை அன்றோ
வருவது அறிகிலை வருத்துது உயிரினை
உருவம் அற்ற பேயாய் உலவுது
அழிவது ஓழிவது எப்படி நடக்குமோ
அடங்கி ஒடுங்கி எத்தனை நாட்கள்
முடங்கி மூலையில் மூச்சைப் பிடித்து
போதுமே ஆட்டம் போய்விடு நீயே
போர்க்களம் நீங்கி அமைதி கிட்டட்டும் !

கருத்துகள் இல்லை: