வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இந்தியன்

நாள்தோறும் மழையா சென்னையிலே
இருமுறை மேட்டூர் நிரம்பியதா
காவிரியில் கரைபுரண்டு ஓடுகிறதா
கனவில்லை தானே நண்பா
கண்களை நம்ப ‌இயலவில்லை
காலங்கள் பருவங்கள் மாறுகின்றன
சமுதாயம் மாறும் நம்பிக்கையுண்டு
சரித்திரம் புரட்டிப் போடப்படுகிறது
புதைந்தவை மேலேறி புதிராய்
புதினங்கள் பனையோலையில் இன்றும்
கடல்கடந்த சரித்திரம் கண்கூடாய்
கல்வெட்டு கடாரம் வரையில்
மொழி மட்டுமல்ல பலவும்
விண்ணில் நிலவின் இருட்டில்
பகையும் பயந்தோடி கூட்டில்
மாற்றங்கள் மகிழ்வே என்றும்
மற்றொன்று உண்டு மனதினில்
ஏழ்மை ஒழிந்து ஏற்றமும்
ஏருழும் கலைஞன் உயர்வும்
சாதிகள் சவக்குழி போதலும்
சாக்கடை அரசியல் சாகவும்
அமைந்து விட்டாலே ஓங்கிடும்
இந்தியன் வல்லவன் என்றபுகழ்

கருத்துகள் இல்லை: