வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கணேசா

ஆனை முகத்தோனே மூஞ்சூறு வாகனனே
ஆண்டவனே ஆதிசிவன் மகனே கணேசா
கும்பிட்ட கரங்களுக்கு குறையற்ற வாழ்வுண்டு
குலம்காக்க வந்தவனே தொப்பை கணபதியே
விநாயகனே வினை தீர்ப்பவனே வேதநாயகனே
விடியும் காலையிலே வணங்கி மகிழ்வோமே
மங்கள நாளுக்கு அதிபதியே பார்வதிமைந்தா
மயிலேறு முருகனின் தமையனே சிவனின்மகனே
நல்லவை யாவும் நின்பெயர் கூறியே
நாளும் செய்திடுவோம் யாமே பிள்ளையாரே
நல்வாழ்வு என்றும் தந்து காத்திடுவாயே

கருத்துகள் இல்லை: