வெள்ளி, 27 செப்டம்பர், 2019

மழலை

குறுகுறுன்னு பார்வை உன்னைச் சுற்றி
விறுவிறுன்னு அறையெங்கும் உன்தவழல்
சின்னக் கண்ணா சிரிப்பாய் நன்றாய்
கன்னக் குழியழகு காணக்கண் கோடிவேண்டும்
பொக்கை வாய்திறந்து பேசிடும் மழலைக்கு
பொற்காசு எடைக்கு எடையே தரலாம்
அம்மா என்ற முதல்வார்த்தை இதயம் நிறையும்
அழகு உன்முகமோ விரல்கள் மெத்தெனவே
கரம் பிடித்து தத்தி நடக்கையிலே
கவலை மறந்த நிலையைப் பெற்றோம்
கள்ளங் கபடமற்ற நிலையே மழலையன்றோ
உள்ளம் உருக்கி நின்றாய் உயிர்கலந்தாய்
என்றும் இதுபோன்றே இருத்தல் ஆகுமோ
துன்பம் உணராத நிலையே இதுவன்றோ !

கருத்துகள் இல்லை: