வெள்ளி, 27 செப்டம்பர், 2019

மனிதம் வாழட்டும்

காலம் காலமாய்க் கதறினாலும் மனமாற்றம் அடையாதவர்களை ஒன்றும் செய்ய இயலாது

பிறக்கும்போதும் இறக்கும்போதும் எதுவும் நமதில்லை, இடைப்பட்ட காலமோ சுமார் எண்பது வருடங்கள்.
யாருக்குப் பிறப்போம் என்பதும் நம் முடிவு அல்ல. எங்கே எப்போது உயிர் துறப்போம் தெரியாது.
குடும்ப வாழ்வில் சில‌ காலமும் சிறுவராய் சில காலமும் பணம் தேடி சில காலமும் ஓடிய பின்னே இருக்கும் சில நாட்களில் ஏன் இந்தக் கூச்சல்.
எம்மதமோ மொழியோ எல்லையோ இல்லாமல் தானே இருந்தோம். நாளையே உலகம் அழிகின்றது என்றால் கூக்குரல்கள் என்னவாகும்.
தீமை பொறாமை ஊழல் வன்முறையை எதிர்த்துப் போராடுவோம். அனைவர்க்கான தனித்துவம் இருக்கட்டும். மனிதர்களாய் அறிவோடு இருப்போம். சரித்திரத்தை மாற்ற இயலுமா, அதைப்பற்றிப் பேசுவது வீணே.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். கட்சிகளையும் வேற்றுமையும் வளர்த்து விட்டது நாமே. குற்றவாளியே நியாயம் பேசுகிறான்.
சிந்தியுங்கள் முதியோரே, நம்மைத் தான், இளையவரை நல் வழியில் செலுத்துங்கள், பழைய பஞ்சாங்கம் பரணில் போடுங்கள்.
இப்போதும் ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். நல்லவை தீயவை நிகழும் போதே அறியப் படுகிறது.
மனிதம் வாழட்டும்.

கருத்துகள் இல்லை: