வெள்ளி, 27 செப்டம்பர், 2019

தாயே உன் நினைவில்

தாய்க்கு மகனாக மறுமுறை பிறக்க வேண்டும்
தாலாட்டி அவளெனக்கு ஆரீரோ பாடவேண்டும்
நிலாவைக் காட்டி அவள் கையால் உண்ண வேண்டும்
நிதமும் குளிப்பாட்டி. தலைவாரி உடையணிவிக்க வேண்டும்
ஈரைந்து திங்கள் வயிற்றில் சுமந்தவளே நீவேண்டும்
ஈரம் மறையாத கண்கள் காயுமுன்னே வேண்டும்
யாரென்ன சொன்னாலென்ன அறுபதிலும் என்னருகே வேண்டும்
ஊரென்ன சொன்னாலும் உனதுமடி நானுறங்க வேண்டும்
உன்னுயிர் மறுபிறவி எடுத்து என்னோடு வேண்டும்
உனது பாசமும் நேசமும் எனக்கு வேண்டும்
தவமிருந்தால் மீண்டு வருவாயின் இறைவனை இறைஞ்சுவேன்
தாயே உன் நினைவில் தினம்தினம் மருகி உருகி நின்றேன்
வந்திடு அன்னையே உன்பிள்ளை புவிமீது காத்திருப்பேன்
வாழ்க்கைக் கணக்கை முடித்து சேர்ந்தே பயணிப்போம்

கருத்துகள் இல்லை: