வெள்ளி, 27 செப்டம்பர், 2019

விசும்பின் மழைத்துளிகள்

புவியன்னைக்கு காலை வணக்கம்
புலர்பொழுதில் புத்துணர்வு வணக்கம்
புதுமழைப் பொழிவில் கொள்ளை அழகாய்
புதுச்சேலை உடுத்திய பொலிவோடு
கண்களுக்குக் குளிர்ச்சியாய் உன்னழகு
காணக் கண்கோடி வேண்டும்
பசுமைப் போர்வையில் பரவசமாய்
விசும்பின் மழைத்துளிகள் நீர்முத்தாய்
இதுகாறும் வறண்ட உன்தோற்றம்
இப்போதே இனிதாய் இளமையாய்
எப்போதும் புன்னகைக்கும் உன்தோற்றம்
எம்மவர்க்கு உள்ளத்து உற்சாகம்
உன்னுருவம் எந்நாளும் இளமையோடு
உவகை கொண்டு இனித்திருக்க
மாதம் மும்மாரி பொழியட்டும்
ஏரிகுளம் நதியாவும் நிறையட்டும்
ஏற்றமிகு வாழ்வுதனை உன்மக்கள்
ஏர்பூட்டி பயிரிட்டு முப்போகம்
விளைவித்த நெல்மணிகள் காய்கறிகள்
உனது காலடியில் சமர்ப்பிப்போம் !



Image may contain: tree, sky, plant, outdoor and nature

கருத்துகள் இல்லை: