வெள்ளி, 27 செப்டம்பர், 2019

ஏனிந்த பேதம்

பாட்டு ஒன்று பாடி வச்சான்
பாரதி என்ற புரட்சிக் கவிஞன்
பெண்ணுக்கு ஒன்று ஏழைக்கு ஒன்று
கண்ணான பாப்பாவுக்கு நாட்டுக்கு தனியொருவனுக்கு
வளம் கொழிக்கப் பாடியவனோ வறுமையிலே
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் வாழ்விக்கவில்லை
சொன்னவன் சொற்கள் வாழ பலகாலம்
சொற்ப நாட்களிலே சென்றான் பராசக்திகாண
நீர்வளம் நிலவளம் மனவளம் குணநலன்
நெருப்பாய் எரிமலையாய் நெஞ்சிலே ரௌத்திரமாய்
எத்தனை பாடல்கள் ஏட்டுச் சுரைக்காயாய்
ஏனோ மனதை வருத்தியது இந்நினைவு
நல்லவர் வாழ்வு நலிந்தே இருக்க
பொல்லாதவர் வாழ்வு உயர்ந்தே இருக்க
ஏனிந்த பேதம் என்றே மனதில்
எப்போதும் கேள்விகள் விடைதான் இல்லை

கருத்துகள் இல்லை: