பாட்டு ஒன்று பாடி வச்சான்
பாரதி என்ற புரட்சிக் கவிஞன்
பெண்ணுக்கு ஒன்று ஏழைக்கு ஒன்று
கண்ணான பாப்பாவுக்கு நாட்டுக்கு தனியொருவனுக்கு
வளம் கொழிக்கப் பாடியவனோ வறுமையிலே
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் வாழ்விக்கவில்லை
சொன்னவன் சொற்கள் வாழ பலகாலம்
சொற்ப நாட்களிலே சென்றான் பராசக்திகாண
நீர்வளம் நிலவளம் மனவளம் குணநலன்
நெருப்பாய் எரிமலையாய் நெஞ்சிலே ரௌத்திரமாய்
எத்தனை பாடல்கள் ஏட்டுச் சுரைக்காயாய்
ஏனோ மனதை வருத்தியது இந்நினைவு
நல்லவர் வாழ்வு நலிந்தே இருக்க
பொல்லாதவர் வாழ்வு உயர்ந்தே இருக்க
ஏனிந்த பேதம் என்றே மனதில்
எப்போதும் கேள்விகள் விடைதான் இல்லை
பாரதி என்ற புரட்சிக் கவிஞன்
பெண்ணுக்கு ஒன்று ஏழைக்கு ஒன்று
கண்ணான பாப்பாவுக்கு நாட்டுக்கு தனியொருவனுக்கு
வளம் கொழிக்கப் பாடியவனோ வறுமையிலே
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் வாழ்விக்கவில்லை
சொன்னவன் சொற்கள் வாழ பலகாலம்
சொற்ப நாட்களிலே சென்றான் பராசக்திகாண
நீர்வளம் நிலவளம் மனவளம் குணநலன்
நெருப்பாய் எரிமலையாய் நெஞ்சிலே ரௌத்திரமாய்
எத்தனை பாடல்கள் ஏட்டுச் சுரைக்காயாய்
ஏனோ மனதை வருத்தியது இந்நினைவு
நல்லவர் வாழ்வு நலிந்தே இருக்க
பொல்லாதவர் வாழ்வு உயர்ந்தே இருக்க
ஏனிந்த பேதம் என்றே மனதில்
எப்போதும் கேள்விகள் விடைதான் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக