வெள்ளி, 27 செப்டம்பர், 2019

நெஞ்சு பொறுக்குதிலை

பாரதி நெஞ்சு பொறுக்குதிலை என்றான்
ஓடி விளையாடு பாப்பா என்றான்
கங்கை நதிப் புரத்து கோதுமைக்கு
காவிரி வெற்றிலை பண்ட‌மாற்று என்றான்
காலம் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை
தீண்டாமை முதல் சாதிவேறுபாடு வரை
மனித மனங்கள் மாறுவதில்லை ஏனோ
புத்தன் காந்தி காமராசர் போதுமோ
இன்னும் எத்தனை காலம்தான் வேண்டுமோ
வேதனை மனதில் வேரூன்றி பலகாலம்
மறுபடி பிறந்து ரௌத்திரம் பழகி
ருத்திர தாண்டவமாடி மாய்த்திடு மிலேச்சரை
களையெடுத்தே நற்பயிரைக் காக்க இயலும்

கருத்துகள் இல்லை: